பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சலூன் கடைக்காரர் கொடூரக் கொலை

கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சலூன் கடைக்காரர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தெலுங்குபாளையம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த சசிக்குமார் என்பவர், வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் சசிக்குமார் வீட்டுக்குச் சென்ற இரண்டு பேர், அவரை வெளியே வருமாறு அழைத்து, சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக ராம்ஜி, இளங்கோ என இரண்டு பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராம்ஜியும் இளங்கோவும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர் என்றும் இவர்களிடம் 5 லட்ச ரூபாய் பணம் வாங்கிய சசிக்குமார் அதனைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாகக் கூறும் போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.