15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறுமியின் உறவினருக்கு மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், அவருக்கு சிறுமியின் தாய்மாமனான முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் முருகேசன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ள புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.