திருநெல்வேலியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு.!

திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாக பெண் சடலம் ஒன்று  மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

பாளையங்கோட்டை அடுத்துள்ள திருமலை கொழுந்து புரம் கிராமத்தைச் சேர்ந்த மாதா என்ற அந்த 50 வயது பெண், வீட்டின் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மாலையில் குளிக்கச் சென்றதாகவும், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்ட போலீசார், ஆற்றங்கரை ஓரம் உள்ள முட்புதர் பகுதியில் மாதாவின் சடலத்தை கண்டெடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.