அரசின் கடன் வெள்ளை அறிக்கை பா.ஜ., – எம்.எல்.சி., வலியுறுத்தல்

பெங்களூரு : ”மாநில அரசு பெற்றுள்ள கடன் குறித்து, வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்,” என பா.ஜ., – எம்.எல்.சி., ஆயனுார் மஞ்சுநாத் வலியுறுத்தினார்.சட்ட மேலவையில், பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் அவர் பேசியதாவது:கடன் பெறும் வழக்கம், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டதல்ல.

பல ஆண்டுகளாக உள்ளது. சித்தராமையா, குமாரசாமி ஆட்சி காலத்திலும் கூட, கடன் பெற்றுள்ளனர். யார் ஆட்சியில், எவ்வளவு கடன் வாங்கப்பட்டது என்பதை தெளிவுப்படுத்த மாநில அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.மற்ற முதல்வர்களுடன் ஒப்பிட்டால், சித்தராமையா காலத்தில், மிக அதிகமாக கடன் வாங்கப்பட்டுள்ளது. பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்த போது, கொரோனா தொற்று பரவியதால், அரசின் பொருளாதாரத்துக்கு பலத்த அடி விழுந்தது. இதனால் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.சிவில் மற்றும் ஆயுதப்படை போலீசாரின் ஊதியம் உட்பட, மற்ற சலுகைகள் விஷயத்தில், எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.