இலவச அரிசி வழங்கும் பணி ரேஷன் கடைக்கு மாற்றப்படுமா| Dinamalar

புதுச்சேரி-அரசு பள்ளிகள் முழு நேரமாக செயல்பட்டு வருவதால், இலவச அரிசி வழங்கும் பணியை ரேஷன் கடைகளுக்கு மாற்ற வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகள், கடந்த பிப்., 4ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு, முழு நேர நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக இலவச அரிசி மூட்டைகளை அரசு பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. இது, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இடையூறாக அமைகிறது.பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அரிசி மூட்டைகள் ஆங்காங்கே இறக்கி வைக்கப்படுகிறது. அத்துடன் அரிசி ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.வகுப்பறைகள் இலவச அரிசி குடோனாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறை பற்றாக்குறை ஏற்படுகிறது.எனவே, இலவச அரிசி வழங்கும் பணியை ரேஷன் கடைகளுக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.