மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரம்-தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த 5 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாகவும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும், என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.