மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு- அமைச்சர் நிதின் கட்காரி

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனை 2020 ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.car

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக பசுமை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்திக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்ற போதும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிலைமை மாறும் என்றும் கட்காரி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.