700 பேர் கல்வி செலவை ஏற்கிறது தெலுங்கானா அரசு| Dinamalar

ஐதராபாத்: சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் கூறியதாவது: உக்ரைனில் தவித்த தெலுங்கானாவைச் சேர்ந்த, 700 மாணவர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கல்வியை தொடர்வது குறித்து பல சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.இந்த மாணவர்களின் அனைத்து கல்வி செலவையும் மாநில அரசு ஏற்கும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.