சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளை தூக்கிட்டு, தாயும் தற்கொலை

சேலம் மாவட்டம் வீராணம் அடுத்த சேனை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக இரு குழந்தைகளை தூக்கிட்டு, தாயும் தூக்கிட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜேஷ் என்பவர் மனைவி குறிஞ்சி தமிழ் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்த நிலையில், மனைவிக்கும் அவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுத்துவிட்டு ராஜேஷ் வெளியே சென்றதாக சொல்லப்படுகிறது.

சிறிது நேரத்திற்கு பின் ராஜேஷை தொடர்புகொண்ட அவரது தாய், அறைக்குள் சென்று குறிஞ்சி தமிழ் தாழிட்டு கொண்டதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

விரைந்து வீட்டிற்கு வந்த ராஜேஷ் அறையை உடைத்தபோது தூக்கிட்ட நிலையில் குறிஞ்சி தமிழும் அவர்களது இரு மகன்களும் தொங்கியதாக கூறப்படுகிறது. மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.