உத்தரப்பிரதேசத்தில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்

முசாஃபர்நகர்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கணவரை மரத்தில் கட்டி வைத்து அவர் கண் முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.  இங்குப் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிக அளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.   இதையொட்டி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.   ஆயினும் உ பி மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முசாபர் நகரில் 24 வயது கணவனும், 21 வயது மனைவியும் கடந்த 22ம் தேதி இரவு தங்களது வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைத் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய கும்பல் ஒன்று வழிமறித்தது. அந்த கும்பல் அந்த பெண்ணின் கணவரை திடீரென தாக்கியது.  அவரை மரத்தில் கட்டி வைத்த கும்பல், அவரது கண் முன்னே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக முசாபர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் சிறுவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த கணவரின் தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்களைப் பார்க்க இருவரும் சென்றதாகவும், அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்திருந்த நிலையில், குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் அதனைப் பார்க்க வீடு திரும்பியதாகவும் கணவர் கூறியுள்ளார்.  முசாபர் நகர் எஸ்பி அபிஷேக் யாதவ், ‘குற்றவாளிகள் அனைவரது மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். 4 பேர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் அதனை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அவர்களில் 2 பேர் சிறுவர்கள்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.