கூடுதல் கல்வி கட்டணம் தேவையில்லை: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

உக்ரைன்
மீது
ரஷ்யா
போர் தொடுத்துள்ளது. இதனால், அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அதேபோல், உக்ரைனின் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

அந்த வகையில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். குறிப்பாக, மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டு சென்றவர்கள். இதனால், அவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, போர் காரணமாக இந்தியா திரும்பியுள்ள
மருத்துவ மாணவர்கள்
அவர்களது கல்வியை இங்கேயே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போர் காரணமாக படிப்பை பாதியில் விட்டு நாடு திரும்பிய இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டில் படிப்பை தொடர வைக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்திய மாணவர்கள் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை ரஷ்யா மற்றும் கிரீமியாவில் உள்ள ரஷ்ய பல்கலைக்கழங்கள் அணுகுகியுள்ளாதாக தெரிகிறது. கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவுத்தேர்வு இன்றியும் தங்கள் பல்கலைக்கழகங்களில் இந்த மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என ரஷ்ய பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

கொஞ்ச நாளைக்கு சைலண்டா இருங்க: ஆர்.என்.ரவிக்கு டெல்லி அசைன்மெண்ட்!

இதேபோன்று, கஜகஸ்தான், ஜார்ஜியா, அர்மீனியா, பெலாரஸ், போலந்து போன்ற நாடுகளும் மாணவர்களுக்கான இதே உதவியை வழங்க முன்வந்துள்ளன. பல்கலைக்கழங்களின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, போர் காரணமாக, இந்த ஆண்டு 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கேஆர்ஓகே-1 தேர்வு ஓராண்டு தள்ளி வைக்கப்படுவதாகவும், கேஆர்ஓகே-2 தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இறுதியாண்டு கேஆர்ஓகே-2 தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அந்நாடு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திவேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.