கேரளாவில் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு தடை

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், உரிய காரணமின்றி பணியில் இல்லாத ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் வேலை நிறுத்த நாட்களில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என்றும், வேலைநிறுத்த நாட்களில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் செல்லும் வகையில் சேவையை உறுதி செய்யுமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.