இந்திய எரிபொருளால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு



இலங்கையில் கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கான எரிபொருள் தரமற்றதென சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் முழுமையான எரிபொருள் நிரப்பிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் அளவை தற்போது மேற்கொள்ள முடியவில்லை என சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விரைவாக முடிந்து விடுவதாகவும் பயணிக்கும் கிலோ மீற்றர் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் பெட்ரோலின் நிறங்களும் வித்தியாசமாக உள்ளது.

இரண்டு சுற்றுகள் பயணிக்கும் போதே எரிபொருள் முடிந்து விடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தாம் கடுமையான நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாக சாரதிகள் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் தரமற்றதென நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதென சாரதிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளே இவ்வாறு தரமற்ற நிலையில் காணப்படுவதாக சாரதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதேவேளை, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் காமினி லொக்குகே முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.