இலங்கையில் போதிய மருந்துகள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து.!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் போதிய மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி இந்திய தூதரகத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் உள்ள Peradeniya மருத்துவமனையில் மருந்துகள் இல்லாமல் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவசர பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் இலங்கையை சேர்ந்த செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது என்றும், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க இந்திய தூதரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.