மராட்டியத்தில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு…!

மும்பை,
மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 
அதன்படி, மராட்டியத்தில் இன்று 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 103-ஐ விட அதிகமாகும்.

இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 73 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 138 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்து 25 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
அதேவேளை, வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.