பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, பட்டா மாறுதலுக்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பெத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி என்பவர் பட்டா மாறுதலுக்காக கண்ணனூர் வடக்குவெளி கிராம நிர்வாக அலுவலரான நவநீதன் என்பவரை அணுகியதாகவும், 2 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பதி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், ரசாயணம் தடவிய நோட்டுகளை லஞ்சமாக பெற்ற போது அவரை கையும் களவுமாக கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.