மரியுபோல் நகரில் மக்களை வெளியேற்ற ரஷ்யா போர் நிறுத்தம் அறிவிப்பு

பொதுமக்கள் வெளியேறும் வகையில் உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் 36ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், துறைமுக நகரான மரியுபோலில் முக்கிய கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமாகி உள்ளன.

இந்நிலையில், அந்நகரில் இருந்து ஜபோரிஜியாவுக்கு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மனிதாபிமான பாதையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜபோரிஜியா வரை நான்கு வழித்தடங்கள் செயல்படுத்துவது குறித்த உக்ரைனின் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்ட ரஷ்யா, பேருந்துகள் பாதுகாப்பாக செல்வதை  உக்ரைன் ராணுவம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.