இந்தியா – நேபாளம் இடையிலான பயணியர் ரயில் போக்குவரத்து தொடக்கம்

இந்தியா – நேபாளம் இடையிலான பயணியர் ரயில் போக்குவரத்தை இருநாட்டுப் பிரதமர்களும் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

அரசுமுறைப் பயணமாக டெல்லிக்கு வந்துள்ள நேபாளப் பிரதமர் சேர் பகதூர் தியுபா மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் நேபாளப் பிரதமரும் இருநாட்டுக் குழுவினரும் பல்துறை ஒத்துழைப்புக் குறித்து விரிவான பேச்சு நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு உடன்பாடுகள் கையொப்பமாயின.

பீகாரின் ஜெய்நகர், நேபாளத்தின் குர்தா இடையிலான பயணியர் ரயில் போக்குவரத்தைப் பிரதமர் மோடியும் சேர் பகதூர் தியுபாவும் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

இந்தியா – நேபாளம் இடையான மின்பாதை, நேபாளத்தில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட துணைமின்நிலையம் ஆகியவற்றையும் தொடக்கி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.