தெறிக்கவிட்ட ஷுப்மான் கில்… டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

புனே:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் புனேயில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச முடிவு செய்தது. இதனால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் மேத்யூ வேட், ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து முன்னேறினார். 
மறுமுனையில் விஜய் சங்கர் 13 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 
ராகுல் தெவாட்டியா 14 ரன்களிலும், அபினவ் மனோகர் ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. டேவிட் மில்லர் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
டெல்லி தரப்பில் முஷ்பிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார். கலீல் அகமது 2  விக்கெட், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.