பயங்கர சத்ததுடன் வெடித்த சிலிண்டர்.. பள்ளியில் தஞ்சமடந்த மக்கள்..!

திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் குரும்பலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் அவரது மகன் ராஜா. அவரது மனைவி ஜெயராணி மற்றும் குழந்தையுடம் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஜெயராணி குழந்தைக்கு பால் காய்ச்சி கொண்டிருந்தார். அவர் அருகில் டீத்தூள் வாங்க சென்ற நேரம் அடுப்பை அணைக்காமலேயே சென்றுள்ளார். பால் பலமுறை பொங்கி வழிந்துள்ளது.

இந்நிலையில், சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் கேஸ் குழயாயில் தீப்பற்றி  சிலிண்டர் வெடித்துள்ளது. பலத்த சத்ததுடன் சிலிண்டர் வெடித்ததால் பயந்து போன அக்கம்பக்கதினர் அங்குள்ள பள்ளியில் தஞ்சமடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.