உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நிலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது – குடியரசுத் தலைவர்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் விவகாரத்தில் இந்தியா நிலையான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றுள்ள குடியரசுத் தலைவர், தலைநகர் அஷ்காபாதில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், போரால் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தாக்குதலை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.