ஐஸ்வர்யாவுக்கு எதிராக திரும்பிய 'இன்னொரு' காதல்

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு கெரியரில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார் ஐஸ்வர்யா.

அவருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் காபி குடிக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்நிலையில் கையில் காபி கப்புடன்
ஐஸ்வர்யா
வெளியிட்ட வீடியோவை பார்த்த
தனுஷ்
, ரஜினி ரசிகர்களே கடுப்பாகி அவரை விளாசிவிட்டார்கள்.

சும்மா, சும்மா காபி குடிக்கிறேன். என்னை பார், என் காபி கப்பை பார் என்று எதையாவது போஸ்ட் செய்ய வேண்டாம். ஊர் உலகத்துல யாருமே காபி குடிக்கிறது இல்ல பாரு. தலைவர் பெயரை கெடுக்காதீர்கள்.

நல்லா இருந்த ஐஸ்வர்யாவுக்கு என்னாச்சு? உங்களின் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு என தெரிவித்துள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை 3 படங்களை இயக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா. தன் அண்ணன் ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்குகிறார். ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மேலும் இன்னொரு இந்தி படத்தையும் இயக்குகவிருக்கிறார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

சாப்பிட காசு இல்ல, கால்ல செருப்பு இல்ல: கண் கலங்கிய விஜய்யின் அப்பா

அடுத்த செய்திஐஸ்வர்யாவுக்கு மாஞ்சு மாஞ்சு நன்றி சொல்லும் தனுஷ் ரசிகாஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.