ஐஸ்வர்யாவுக்கு மாஞ்சு மாஞ்சு நன்றி சொல்லும் தனுஷ் ரசிகாஸ்

3 படம் மூலம் தான் இயக்குநர் அவதாரம் எடுத்தார்
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த். தன் முன்னாள் கணவரான தனுஷை தான் ஹீரோவாக நடிக்க வைத்தார். தன் தோழி ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

அந்த படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. 3 படம் மூலம் அனிருத் கோலிவுட்டுக்கு வந்தார்.

மேலும் 3 படம் மூலம் தான்
தனுஷ்
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். இப்படி 3 பேர் புது அவதாரம் எடுத்த 3 படம் ரிலீஸாகி 10 ஆண்டுகளாகிவிட்டது.

அந்த படத்தில் வந்த ராம் கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ராமாக மிரட்டியிருந்தார் தனுஷ். இந்நிலையில் இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு நன்றி அண்ணி என ஐஸ்வர்யாவிடம் தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழுமாறு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். இனி மீண்டும் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

சாப்பிட காசு இல்ல, கால்ல செருப்பு இல்ல: கண் கலங்கிய விஜய்யின் அப்பா

அடுத்த செய்திSuriya:இல்ல, இல்ல, சூர்யா அப்படி பண்ணலயாம்: உண்மை இதோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.