உத்தரப் பிரதேசத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நூறு விழுக்காடு மாணவர் சேர்க்கையை உறுதிசெய்யும் பள்ளி செல்வோம் திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்துள்ளார்.
கொரோனா சூழலுக்குப் பின் சிறார்கள் அனைவரையும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பள்ளி செல்வோம் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு தொடக்கியுள்ளது.
சிராவஸ்தியில் இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாணவர்களுக்கு உணவு வழங்கினார். அப்போது பேசிய அவர் கொரோனா பெருந்தொற்றால் வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளும் பாதிக்கப்பட்டதாகவும், பள்ளிக்கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.