இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ராஜபக்சே குடும்பத்தின் நிர்வாக தோல்வி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் மீது வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இலங்கையில் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளும் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் கூட்டணியில் இருந்து 41 எம்.பி.க்கள் வெளியேறுவதாக அறிவித்தனர். 

எங்கள் கட்சி மக்களுக்கு ஆதரவாக உள்ளது: சிறிசேனா

இதனிடையே, ராஜபக்சேவின் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற இலங்கை சுதந்திரக் கட்சி  மக்கள் பக்கம் உள்ளது என அக் கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனா கூறினார். ராஜபக்ச குடும்பத்தின் நிர்வாக தோல்வி தொடர்பாக நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படுவதில்லை. மோசமான பொருளாதாரம் எல்லாவற்றையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. உணவு முதல் குடிநீர் வரை அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்…

மின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் தெரு விளக்குகள் கூட அணைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதற்குக் காரணம் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக, அவசரகால சூழ்நிலைகளுக்கு சில ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் நெடுஞ்சாலையின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துள்ளது.

அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ததை அடுத்து  கடுமையான அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே நேற்று இடைக்கால அரசில் நான்கு அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவி ஏற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்

அவருடன் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதியமைச்சராக பதிவியேற்ற அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.  

முன்னதாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சரவை கூட்டாக ராஜினாமா செய்தது. 

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.