வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததை கண்டித்ததால்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் அரசு விரைவு போக்குவரத்து துறையில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். பாரதிராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியைடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.