அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட மாபொசி.யின் மகள் மாதவி.. இரண்டு மாத தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார்

கொரோனா மற்றும் அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி மாபொசி.யின் மகள், காவேரி மருத்துவமனை மருத்துவர்களின் சீரிய முயற்சியால், பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

மாபொசி மகளான மாதவி சிவஞானம், கிலியின் பார் சின்ட்றோம் என்கிற கடுமையான அரியவகை நரம்பியல் நோய் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு இரண்டு முறை செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.