உருமாறிய மிரட்டும் ஓமைக்ரான் வைரஸ்… லாக்டவுடன் அச்சத்தில் உலக மக்கள்!

கடந்த ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது.

அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது ஒமைக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், மரபணு மாற்றம் அடைந்த இரண்டு ஒமைக்ரான் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்களுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன. இவற்றால் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி முடிவு!

ஆனாலும் இங்கிலாந்து, ஜெர்மனி, போட்ஸ்வானா, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா மூன்றாவது அலை அடங்கி, உலகம் மீண்டும் இயவ்பு நிலைக்கு திரும்பியுளள நிலையில், ஓமைக்ரானின் உருமாறிய வைரஸ்கள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருவது உலக மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா மற்றும் பொதுமுடக்கம் குறித்த அச்சத்தை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.