பவானி கேரக்டரில் இருந்து விலகியது ஏன்? விளக்கம் கொடுத்த வெண்பா ஃபரீனா

Tamil Serial Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல்களில ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில், வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருபவர் ஃபரீனா ஆசாத். தனது ஒருதலை காதல் காரணமாக பாரதி கண்ணம்மாவை பிரித்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.

இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் இவருக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், இவர் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு, இவர் பிரசவத்திற்க்காக சென்றிருந்த போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையான சரிவை சந்தித்து. அந்த நேரத்தில் வெண்பா கேரக்டரை வெறுப்பவர்கள் கூட வெண்பா எப்போது உள்ளே வருவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள .பரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா மட்டுமல்லாமல், கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் தொடரில் பவானி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். பாரதி கண்ணம்மாவில் வில்லி என்றாலும், அபி டெய்லர் தொடரில், பாசிட்டீவ் கேரக்டரில் நடித்து வந்தார். நன்றாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ஃபரீனா ஆசாத் திடீரென விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு பதிலாக பவானி வேடத்தில் நடிக்க ராஜபார்வை சீரியலில் நடித்து வந்த நடிகை கீர்த்தி கமிட் ஆகியுள்ள நிலையில். ஃபரீனா ஆசாத் திடீரென விலக காரணம் என்ன என்று ரசகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஃபரீனா ஆசாத் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பவானி கதாபாத்திரத்தில் என்னால் தொடர முடியவில்லை.

இந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்த புரொடக்‌ஷன் நிறுவனத்திற்கும், முழு ஒத்துழைப்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி! என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ஃபரீனா வெளியேறியது குறித்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.