ரஷ்யாவில் இன்போசிஸ் நிறுவனத்தை மூட முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், ரஷ்யாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து போர் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது ரஷ்ய அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளது.

latest tamil news

இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவரான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷிதாவை பிரிட்டன் நிதியமைச்சரான ரிஷி சுனக் திருமணம் செய்துள்ளார். இன்போசிஸ் நிறுவன பங்குகளில் சுமார் 400 மில்லியன் பவுண்ட் அளவில் அக்ஷிதாவிற்கு உள்ளது. இதனால் ரஷ்யாவிலிருந்து ஆதாயம் பெற்று வருவதாக ரிஷி சுனக் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனை ரிஷி சுனக் மறுத்தார். இந்த சூழ்நிலையில் ரஷ்யாவில் செயல்பட்டு வந்த இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாகவும், அங்கு அனைத்து வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.