விஜய் மாதிரி இல்ல, ரஜினி ரொம்ப உஷாரு: என்ன செஞ்சிருக்கார்னு தெரியுமா?

நெல்சன் திலீப்குமார்
இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த
பீஸ்ட்
படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்தை பார்த்த விஜய் ரசிகர்களே ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

விஜய்ணா போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு மொக்க கதையை கொடுத்திருக்கிறாரே நெல்சன் என ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக ரஜினியை வைத்து என்ன கொடுமை பண்ண காத்திருக்கிறாரோ நெல்சன் என ரசிகர்கள் பயந்துவிட்டார்கள்.

அய்யய்யோ அடுத்து தலைவராச்சே: பயத்தில் ரஜினி ரசிகர்கள்
விஜய் போன்ற பரிதாப நிலை ரஜினிக்கு ஏற்படாதாம். நெல்சனை அழைத்து கதை கேட்டிருக்கிறார் ரஜினி. நெல்சன் கதை சொன்ன விதம் பிடித்ததே தவிர அவரின் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையாம்.

இதையடுத்து தானே ஒரு கதையை சொல்லி, திரைக்கதை தயார் செய்துவிட்டு வாங்க என்றாராம் ரஜினி. நெல்சன் எழுதி வந்த திரைக்கதையை 10 முறை திருத்தி எழுத வைத்தாராம் ரஜினி. அதன் பிறகே தன் மனதிற்கு பிடித்தது போன்று திரைக்கதை அமைந்துவிட்டதாக ஓகே சொல்லியிருக்கிறார்.

ரஜினி ஓகே சொன்னதும் தலைவர் 169 படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தான் பீஸ்ட் போன்று தலைவர் 169 படத்தின் கதை சொதப்பாது என்று நம்பப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.