இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று இடம்பெற்ற கொரோனா ஒப்பிடும்போது இன்று (14) கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (14) காலை வெளியிட்டது.

அதன்படிஇ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 88-ஐ விட குறைவாகும்.

இதனால்இ நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 39 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 818 பேர் குணமடைந்துள்ளனர். இதனால்இ இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இதனால்இ இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 186 கோடியே 22 லட்சத்து 76 ஆயிரத்து 304 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.