சிறுமிக்கு பாலியல் தொல்லை- 86 வயது முதியவருக்கு சாகும்வரை சிறை தண்டனை

அரியலூர்:
அரியலூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 86). இவர் கடந்த 2020ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார். 
அதன் அடிப்படையில்  போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்த் இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி குப்புசாமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.