திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
புளியமரத்து கோட்டையை சேர்ந்த இளையராஜா என்பவர் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரில் இருந்து திண்டுக்கல் சென்றுள்ளார். காக்காதோப்பூர் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நான்கு வழிச்சாலையில் இளையராஜா வாகனம் மீது வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு லாரி மோதியது.
இதில் படுகாயமடைந்த ஐயப்பன் கீழே விழுந்த நிலையில் வலிப்பு ஏற்பட்ட அருகில் இருந்தவர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி உதவியுடன் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.