நர்சரி கார்டன் ஊழியரின் 5 சவரன் தங்க செயினை, மர்ம நபர் ஒருவர் பறித்து செல்லும் சிசிடிவிக்காட்சி வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சியில் நர்சரி கார்டன் ஊழியரின் 5 சவரன் தங்க செயினை, மர்ம நபர் ஒருவர் பறித்துவிட்டு தப்பிச் செல்லும் சிசிடிவிக்காட்சி வெளியாகியுள்ளது.

பூ செடிகள் விற்பனை செய்யும் நர்சரி கார்டனில் வட்டம் பகுதியை சேர்ந்த சாந்தாபாய் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்கு வழக்கம் போல் அவர் பணியில் இருந்த போது, கைக்குட்டையால் முகத்தை கட்டியபடி நீல நிற பேண்ட் சட்டையுடன் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சாந்தாபாயுடம் பேச்சுக்கொடுத்து, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த கூட்டாளியுடன் தப்பி சென்றுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.