மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் திருப்பதியில் மே தரிசனம் டிக்கெட் நாளை வெளியீடு: ஆன்லைனில் முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், நாளை வெளியிடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா நாளை காலை வெளியிடப்பட உள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் முதல் தொடங்கப்பட்ட சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.இந்நிலையில், மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட கால தீராத நேயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரம் டிக்கெட்டுகள்  https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் விதமாக நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. எனவே இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், தரிசனம் செய்யவரும், மூத்த குடிமக்கள்  வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவச் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.