எல்.ஐ.சி., ஒரு பங்கின் விலை 902,949 ரூபாய் என நிர்ணயம்| Dinamalar

புதுடில்லி: எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை மே. 4 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பங்கு வெளியீட்டின் வாயிலாக, எல்.ஐ.சி., 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து,ஒரு பங்கின் விலை 902, 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. வரும் மே 4ம் தேதி துவங்கும் பங்கு வெளியீடு, 9 தேதியுடன் முடிவடைய உள்ளது.

மேலும், பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும்; சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கலாம் என தெரிகிறது.

துவக்கத்தில், அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.அனேகமாக, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, பங்கு வெளியீடு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம்.

இவ்வாறு தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.