புகைப்பட கலைஞர் டூ இயக்குனர் – ஓராண்டு நினைவலைகளில் கே.வி.ஆனந்த்

பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, ஒளிப்பதிவாளராக மாறி, பின் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். கடந்தாண்டு இதே நாளில் லேசான கொரோனாவாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஓராண்டாகி விட்டது. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்… 1966ம் ஆண்டு அக்., 30ம் தேதி சென்னையில் பிறந்தவர் கே.வி.ஆனந்த். பத்திரிகை துறையில் புகைப்படக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின் சினிமாவிற்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக … Read more

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 13 பேர்.. படகுக்கு காத்திருந்த போது கைது செய்தது இலங்கை கடற்படை..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 13 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இங்கையில் வசிக்கும் தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலையில் வசித்த 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தங்களது சொத்துக்களை விற்று அதில் கிடைத்த … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்: தமிழர்களின் நிலை அறியச் செல்வதாக தகவல்

சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். 4 நாட்கள் பயணமாக இலங்கை செல்லும் அவர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிய உள்ளார். மேலும் அங்கு நிலவும் பொருளாதார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் குறித்தும் மக்களின் உடனடி தேவைகள் குறித்தும் அறியவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பயணத்துக்குப் பின் இலங்கையில் நிலவும் … Read more

பிரித்தானியாவில் கந்தையா சிங்கம் அவர்களின் ‘நடந்து வந்த பாதையிலே’ நூல் வெளியீடு

சிறந்த விளையாட்டு வீரரும் எழுத்தாளருமான கந்தையா சிங்கம் என்பவரது “நடந்து வந்த பாதையிலே “ என்னும் நூல் வெளியீடானது கடந்த வாரம் பிரித்தானியா, ஈலிங் சிறி கனக துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் எழுத்தாளர் இரா.உதயணன் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. . திரு இரா உதயணன் அவர்கள் தனது உரையில், நூலாசிரியர் இன்னும் பல நூல்கள் படைக்கவேண்டும் என்றும், நாவல், சிறுகதை எழுதுவதற்குரிய தகுதி இருப்பதை சுட்டிக் காட்டினார். உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை, உலகத் தமிழர் … Read more

திட்டவும், பாராட்டவும் 2 கோஷ்டி மோடிக்கு ஆதரவாக மாஜி ஐஏஎஸ்கள் திறந்த மடல்

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசை விமர்சித்து 108 மாஜி ஐஏஎஸ்.கள் கடிதம் எழுதிய நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பு அதிகாரிகள் திறந்த மடல் அனுப்பி உள்ளனர். ‘பாஜ ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என 108 மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலடியாக ‘அக்கறையுள்ள குடிமக்கள்’ என தங்களைக் கூறிக் கொண்ட மாஜி அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு திறந்த … Read more

அஜய் தேவ்கன், அமிதாப் நடித்த 'ரன்வே 34' : முதல் நாளிலேயே திண்டாட்டம்

ஹிந்தித் திரையுலகில் இந்த ஆண்டில் வெளியான டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே அங்கு 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இந்தப் படங்கள் அதிக வசூலைப் பெற்றது. இந்நிலையில் நேற்று வெளியான ஹிந்திப் படங்களான 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2' ஆகிய படங்கள் முதல் நாள் வசூலில் திண்டாடி உள்ளன. அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்துள்ள … Read more

சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும்., அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!

திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,  “சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.இது தொடர்பாக காவல்துறையினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும். சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக காவல்துறையினர் … Read more

நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரன், தொடர்புடைய பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது உள்ளிட்ட புகார்களில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை ஜாக்குலினுக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள குதிரை உள்ளிட்ட 5 கோடிக்கு … Read more

ரயில்வே தேர்வு | தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க சீமான் வலியுறுத்தல்

சென்னை: ரயில்வே துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே துறை தேர்வினை எழுதத் தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் ரயில்வே துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, மத்திய அரசின் … Read more