உக்ரைனில் பள்ளி மீது தாக்குதல்: 60க்கும் மேற்பட்டோர் பலி!| Dinamalar

கீவ்: உக்ரைனில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். லட்சகணக்கான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பிலோகொரிவிகா கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 90 பேர் தஞ்சம் புகுந்திருந்தனர். அங்கு ரஷ்ய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுவதாக, லூகான்ஸ்க் பிராந்திய கவர்னர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில், பள்ளி முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் இருந்து 27 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதில், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.