கர்நாடகாவில், காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய காதலன் சாமியார் வேடத்தில் இருந்தபோது கைது செய்த போலீசார்.!

கர்நாடகாவில், காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய காதலன் திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் இருந்தபோது போலீசார்  கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் சுங்கத்கட்டே பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான்.

தன் காதலை ஏற்றுக் கொள்ளாத ஆத்திரத்தில் அந்த இளம்பெண் மீது ஆசிட் பாட்டிலை எடுத்து வீசி விட்டு நாகேஷ் தப்பி ஓடி விட்டான்.

இந்த வழக்கில் நாகேசை போலீசார் தேடி வந்த நிலையில், திருவண்ணாமலை  ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு வருவது தெரிய வந்தது. அங்கு மாற்று உடையில் சென்ற போலீசார் நாகேஷை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.