திருப்பூரில் பெண் ஜோதிடரை தாக்கி நகை, பணம் கொள்ளை.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண் ஜோதிடரை தாக்கி பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கணபதிபாளையத்தில் ஜோதிடம் பார்த்துவரும் விமலாதேவியை, திருமணம் தொடர்பாக  பிரசன்னம் பார்த்த போது 40 வயதைத் தாண்டி விட்டதால் இனி திருமணம் நடைபெறாது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற அந்த நபர் கடந்த 4ஆம் தேதி  மீண்டும் வந்து  தனக்கு எப்படி திருமணம் ஆகாது என்று கூறலாம் என  விமலாதேவியை தாக்கி  7 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள், ஏழாயிரம் ரூபாய் பணத்தை  திருடிச் சென்று விட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.