பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு – சஜித் பிரேமதாசா திடீர் அறிவிப்பு

கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவிற்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.
இதற்கிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே கடந்த வாரம் பதவியேற்றார். அவர் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கோரியிருந்தார். 
இந்நிலையில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேற்விற்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதேசா திடீரென ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். 
 
மக்களின் கொள்கைகளுக்கு எதிராக ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி செயல்பட்டால் ஆதரவு திரும்பப் பெறப்படும். நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கவே இந்த ஆதரவு என அவர் நிபந்தனை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.