தமிழ்நாடு முழுவதும் 10 ரூபாய்க்கு மஞ்சள்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்.!

தமிழ்நாடு முழுவதும் தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் துணியிலான மஞ்சள்பையை வழங்கும் வகையில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சிக்கு பின்னர் மாநிலம் முழுவதும் மஞ்சள்பை விற்பனை இயந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப்படும் என சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.