சீயோல்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தென்கொரியா சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் , ஏவுகணை சோதனைகளை வடகொரியா சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் வடகொரியாவுடனான நின்றுபோன பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது .
இந்த நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று தென்கொரியா சென்றார் ஜோ பைடன். அங்கு அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டம் குறித்தும் , அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement