ஹரியானா முன்னாள் முதல்வர் குற்றவாளி| Dinamalar

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 1993 முதல் 2006 ம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010ம் ஆண்டுமார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த டில்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என அறிவித்தது. தண்டனை குறித்த வாதம் வரும் 26 ம் தேதி நடக்கும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.