கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக இதுதான் காரணம் – எம்.எஸ்.டோனி விளக்கம்

புனே: ஐதராபாத் அணியுடனான வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேசியதாவது: பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி எங்களுக்கு நல்ல இலக்கை வெற்றிக்கரமாக பந்துவீச வழங்கினர். ஆனால் நாங்கள் முதல் 2 ஓவரிலே 25 ரன்கள் விட்டு கொடுத்தோம். இதனால் வித்தியாசமான முறையில் பந்துவீசும் சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தள்ளப்பட்டனர். ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் சென்றாலும் கவலைப்படாதீர்கள், எஞ்சிய 2 பந்தை வைத்து எதையாவது செய்யுங்கள் என எப்போதும் நான் சொல்வேன். என்னுடைய இந்த … Read more

இந்தியாவில் மேலும் 3,157 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. நேற்றும், இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று புதிதாக 3,157 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.  இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 157 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 ஆக அதிகரித்துள்ளது.  அதேபோல், கொரோனா தொற்று … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த … Read more

10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்றுடன் நிறைவு!!!

சென்னை : 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. அத்துடன் செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு!

புவனேஷ்வர் : கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை இன்று முதல் மாற்றியமைத்து ஒடிசா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளா: ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்; உணவகத்துக்கு சீல்

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்திருக்கிறார். மேலும் 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காசர்கோடு மாவட்டம் செருவத்தூரில் மக்கள் அதிகம் வந்துசெல்லும் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் இங்கு ஷவர்மா சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், … Read more

நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம் – பரபரப்பு சம்பவம்

மும்பையில் இருந்து மேற்கு வங்கத்துக்கு வந்துக் கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகருக்கு நேற்று இரவு ‘ஸ்பைஸ் ஜெட் போயிங் 737’ விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. துர்காபூர் அருகே வந்ததும் விமானம் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதனை ‘ஏர் – டர்பியுலன்ஸ்’ என்பார்கள். விமானம் குலுங்கியதால் … Read more

சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட்பிரபு! அடுத்த அப்டேட் எப்போ?!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். சிலம்பரசன் நடித்து வெற்றிபெற்ற மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து மன்மத லீலை என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த அந்த படத்துக்குப் பின், நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் அந்த திரைப் படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக தன்னுடைய குழுவினருடன் ஹைதராபாத் சென்றுள்ளார் … Read more

சி.ஐ.ஏ., அதிகாரியானார் இந்திய வம்சாவளி!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் முல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிகான் பள்ளத்தாக்கில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர் நந்த் முல்சந்தானி. இவர், அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி உள்ளார். டில்லியில், 1979 – 87 வரை பள்ளியில் படித்த நந்த் முல்சந்தானி, பின்னர் அமெரிக்கா சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் … Read more