தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு.. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்!

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தமைக்கு ஆளுநரிடம் முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.