உலக நாடுகளை உலுக்கும் தொற்று… சீனா போன்று அதிரடி முடிவெடுத்த முக்கிய ஆப்பிரிக்க நாடு


உலக நாடுகள் பலவற்றில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் குரங்கம்மை தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நைஜீரிய அரசு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

இதனையடுத்து நைஜீரியாவில் இனி காட்டு விலங்குகளின் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களில் மட்டும் 6 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு, இந்த ஆண்டில் இதுவரை 21 பேர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அதிகாரிகள் தரப்பு இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

கொரோனா பரவல் துவக்க நாட்களில் சீனாவிலும் இதுபோன்று காட்டு விலங்குகளின் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது.
நோய்வாய்ப்பட்ட விலங்கின் இறைச்சியை உண்பதன் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் குரங்கம்மை பரவலுக்கு உண்மையான காரணம் அதுவல்ல எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நைஜீரியாவை பொறுத்தமட்டில் குரங்கம்மை தொற்றானது வீரியம் இழந்த லேசான தொற்றாகவே பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளை உலுக்கும் தொற்று... சீனா போன்று அதிரடி முடிவெடுத்த முக்கிய ஆப்பிரிக்க நாடு

மேலும், கிராமப்பகுதிகளில் மட்டுமே தற்போது குரங்கம்மை தொற்றானது அடையாளம் காணப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 21 பேர்களுக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டாலும், ஒருவர் மட்டுமே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆப்பிரிக்க நாடுகளுடனான பயணத் தொடர்பு அதிகமில்லாத ஐரோப்பாவில் குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் சமீபத்திய அதிகரிப்பை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஒருவரில் இருந்து, அவருடன் நெருக்கமாக பழகும் நபர்களுக்கு குரங்கம்மை பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றே கூறுகின்றனர்.

இந்த நிலையில், குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.