பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு.. புதுச்சேரி, சென்னை, காரைக்காலில் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிப்பு..!

இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரான்ஸ் அதிபர் தேர்தலைத் தொடர்ந்து வெளிநாடுவாழ் பிரஞ்ச் குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும் 4 ஆயிரத்து 463 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக புதுச்சேரியில் 2 மையங்களும் சென்னை, காரைக்காலில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு குடிமக்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.