மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. இவருக்கு கையில் காயம் ஏற்றபட்டதால் மதுரை அரசு மருத்துவமனையின்  விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகத்தில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கடைக்கு சென்றுவிட்டார்.

அப்போது, கழிவறைக்கு சென்ற மணிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.